கால்பந்து வீரர் டோனி க்ரூஸ் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார் !! கவலையில் ரசிகர்கள் !

Published by
அகில் R

சென்னை : பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் சர்வதேச கால் பந்திலிருந்து தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

கால்பந்தில் ஜெர்மனி அணிக்காக விளையாடி வருபவர் தான் டோனி குரூஸ், இவர் ஜெர்மனி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆவார். மேலும், ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியின் நட்சத்திர மிட்-பில்டர் ஆவார். மேலும் இவர் 14 ஆண்டுகளாக ஜேர்மனி கால்பந்து அணியில் ஒரு முக்கிய புள்ளியாக விளையாடி வந்தவர் ஆவார். அதே போல கடந்த 2014 ம் ஆண்டு இவர் ரியல் மாட்ரிட் அணியில் இடம்பெற்று தற்போது வரை 10 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

அத்துடன் ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அதே போல ரியல் மாட்ரிட் அணிக்காக இவர் 305 போட்டிகள் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார், அதனை தொடர்ந்து பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 13 கோல்களும், பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளில் விளையாடி 10 கோல்களும் அடித்து அசத்தியுள்ளார்.

இவரது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி யூஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளது. இந்த நிலையில் டோனி க்ரூஸ் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ரியல் மாட்ரிட் அணிக்காக  நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாளாக தான் நான் பார்க்கிறேன். கால்பந்து தான் என்னை ஒரு மனிதராகவும், வீரராகவும் மாற்றியது.

என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் குறிப்பாக இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும். அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், எனது முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் இந்த தருணத்தில் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் ஓய்வால் அவரது ரசிகர்களும், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களும் சற்று கவலையில் இருந்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

8 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

8 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

8 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

10 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

11 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

11 hours ago