கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்..!

Published by
murugan

ஜெர்மனியின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் நேற்று (திங்கள்கிழமை) காலமானார். பெக்கன்பவுர் 1974 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டனாக  இருந்தார். 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை மூலம் தனது 20-வது வயதில் பெக்கன்பவுர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.  பெக்கன்பவுர் மேற்கு ஜெர்மனிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தலைமையில் 1972-ல்  பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை மேற்கு ஜெர்மனிக்கு முதல் பெரிய வெற்றியை பெற்று கொடுத்தார். அதன்பிறகு, 1966ல் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்த்து, 1974 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பையை மேற்கு ஜெர்மனி கைப்பற்றியது. பெக்கன்பவுர் சிறப்பான செயல்பாட்டிற்காக 1972 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் Ballon d’Or விருதை வென்றார்.

1983-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் மேற்கு ஜெர்மனி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பெக்கன்பவுர் 1986 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிகளில்  மேற்கு ஜெர்மனி அணியை வழிநடத்தினார்.

அவரது மேற்கு ஜெர்மனி அணி 1986 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியில் நடந்த உலகக்கோப்பை மேற்கு ஜெர்மனி அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

 

Recent Posts

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

36 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago