இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர். பின்னர் இறங்கிய முகமது மிதுன் நிலைத்து நிற்காமல் 13 ரன்களுடன் வெளியேறினர். இதனால் பங்களாதேஷ் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.இதை தொடர்ந்து கேப்டன் மோமினுல் ஹக் , முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இனைந்து அணியின் எண்ணிக்கையை உயரத்தினர்.
நிதானமாக விளையாடி வந்த முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களுடனும் , கேப்டன் மோமினுல் ஹக் 37 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற பங்களாதேஷ் அணி 58.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் , முகமது ஷமி 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…