உலகக் கோப்பையில் பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில், கலவரங்களுக்கு முன்னேற்பாடாக 10,000 போலீசார் குவிப்பு.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை முன்னிட்டு கலவரங்கள் ஏற்படக்கூடும் என்று அஞ்சி, பிரான்ஸில் முன்னேற்பாடாக 10,000 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
காலிறுதியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை வீழ்த்தி மொரோக்கோ அரையிறுதிக்கு முன்னேறியதை அந்நாட்டு ரசிகர்கள் பிரான்ஸில் வன்முறை கலவரத்துடன் கொண்டாடினர், இதனையடுத்து இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரான்ஸின் சாம்ப்ஸ் எலிஸீஸின் பாதுகாப்பிற்காக மட்டுமே கிட்டத்தட்ட பாதி போலிசார் அர்ப்பணிக்கப்பட உள்ளனர், இதனால் பாரிஸ் சுற்றுவட்டச் சாலையின் பெரும்பாலான நுழைவு வாயில்கள் மாலை 6:30 மணி முதல் மூடப்பட உள்ளன. மேலும் மாலையில், பல மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளன.
மேலும் மற்றொரு அச்சுறுத்தலாக இரு நாடுகளுக்கு இடையே உள்நாட்டு மோதலை தூண்டிவிட சில தீவிரவாத குழுக்கள் சமூக ஊடகங்களில் அணி திரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் போட்டிக்கு பிறகு நகர மையத்தின் தெருக்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க ரோந்து பணியை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…