கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு அல்பேனிய சூப்பர் லீக்கில் நடந்த எக்னேஷியா-பார்டிசானி போட்டியின் போது கானா நாட்டை சார்ந்த ரபேல் த்வமேனா (28) சுருண்டு மைதானத்திலே விழுந்து இறந்தார். ரபேல் த்வமேனா சரிந்து கீழே விழுந்த உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
எக்னேஷியா-பார்டிசானி போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்று வந்தது. போட்டி தொடங்கிய 24-வது நிமிடத்தில் மைதானத்திலே ரபேல் த்வமேனா சரிந்து விழும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அவர் கிழே விழுவதை பார்த்த நடுவரும் மற்ற வீரர்களும் உடனடியாக ரபேல் த்வமேனா நோக்கி ஒடி சென்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து ரபேல் த்வமேனா-வை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அல்பேனிய சூப்பர் லீக்கில் தற்போது அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை த்வமேனா உள்ளது. த்வமேனா கானா நாட்டுக்காக எட்டு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆட்டங்களில் இரண்டு கோல்களையும் அடித்துள்ளார். கடந்த 2017-ல் முதன்முறையாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் 2021 இல் ஆஸ்திரிய கோப்பை போட்டியின் போதும் இப்படி மைதானத்தில் கீழே விழுந்தார். பின்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விளையாட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…