யூரோ கோப்பைக் கால்பந்து போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
ஸ்பெயின்,செவில்லில் 2020 ஆம் ஆண்டின் யூரோ கோப்பைக் கால்பந்து இறுதி-16 அணிகளுக்கான நாக் அவுட் சுற்றுப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
முதல் பாதியில் ரொனால்டோ ஒரு பரபரப்பான ஃப்ரீ கிக் எடுத்தார்,ஆனால் அது பெல்ஜியம் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸின் டைவ் மூலம் காப்பாற்றப்பட்டது.போட்டியை சமன் செய்ய போர்ச்சுகல் அணிக்கு பல நல்ல வாய்ப்புகள் இருந்தன,ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.காரணம்,பெல்ஜியம் வீரர் தோர்கன் ஹசார்டு,கடைசி 42வது நிமிடத்தில் அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்நிலையில்,ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணியை பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.எனவே,போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
இதனால்,ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது.மேலும்,ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியாக இது கருதப்படுகிறது. இதன்காரணமாக,ரொனால்டோவின் அதிக கோல் கனவு கலைந்தது.
இதனையடுத்து,பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறி,இத்தாலியை எதிர்கொள்ள உள்ளது.முன்னதாக,இத்தாலி அணி ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…