யூரோ கோப்பைக் கால்பந்து போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
ஸ்பெயின்,செவில்லில் 2020 ஆம் ஆண்டின் யூரோ கோப்பைக் கால்பந்து இறுதி-16 அணிகளுக்கான நாக் அவுட் சுற்றுப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
முதல் பாதியில் ரொனால்டோ ஒரு பரபரப்பான ஃப்ரீ கிக் எடுத்தார்,ஆனால் அது பெல்ஜியம் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸின் டைவ் மூலம் காப்பாற்றப்பட்டது.போட்டியை சமன் செய்ய போர்ச்சுகல் அணிக்கு பல நல்ல வாய்ப்புகள் இருந்தன,ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.காரணம்,பெல்ஜியம் வீரர் தோர்கன் ஹசார்டு,கடைசி 42வது நிமிடத்தில் அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்நிலையில்,ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணியை பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.எனவே,போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது.
இதனால்,ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது.மேலும்,ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியாக இது கருதப்படுகிறது. இதன்காரணமாக,ரொனால்டோவின் அதிக கோல் கனவு கலைந்தது.
இதனையடுத்து,பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறி,இத்தாலியை எதிர்கொள்ள உள்ளது.முன்னதாக,இத்தாலி அணி ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…