கடைசி நிமித்தத்தில் வெற்றியை உறுதி செய்த இங்கிலாந்து ..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

Published by
அகில் R

யூரோ கோப்பை : நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

யூரோ கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியானது இன்று அதிகாலை நடைபெற்றது, மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதற்கு ஏற்ப சரியாக போட்டியின் 7’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சகா இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

மேலும், இங்கிலாந்து அணி அந்த முன்னிலை கோலால் ஆதிக்கம் செலுத்தி வந்தது, அதன்பின் ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியினர் செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி சூட் கிடைக்கும், அதனை அறிய வாய்ப்பாக எடுத்த இங்கிலாந்து அணியின் கேன் அருமையாக கோலை அடித்து அசத்துவார். இதனால், போட்டி 1-1 என சமநிலைக்கு மாறிவிடும்.

மேற்கொண்டு விளையாடிய 2 அணிகளும் கடுமையாக போராடியும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும், கிடைத்த ஒரு சில கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். யூரோ கோப்பையின் அரை இறுதி போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது என்றே கூறலாம்.

இதனால், 90′ நிமிடங்கள் ஆகியும் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் விளையாடியதால், போட்டி கண்டிப்பாக பெனால்டி சூட் வரை செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் 90’நிமிடத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்ட 5′ நிமிடத்தில், அதாவது 90’+1 நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வாட்கின்ஸ் அபாரமாக கோலை அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என வெற்றியை உறுதி செய்தது.

மேலும், 4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த யூரோ கோப்பை தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. கடந்த 2020-ல் நடைபெற்ற யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து இறுதி போட்டி வரை சென்று இத்தாலியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

20 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

49 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago