கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நாள் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கிரிக்கெட் வீரர்கள், 4 பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது 7 பெரும் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். மேலும், மீதமுள்ள வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் அடுத்தபடியாக இங்கிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாட உள்ளனர். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது பாகிஸ்தான் அணியுடன் விளையாட இருக்கும் ஒருநாள் தொடருக்கு புதிதாக 9 வீரர்களை தேர்வு செய்துள்ளது. காயத்தின் காரணத்தால் ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது விளையாட இருக்கும் ஒரு நாள் தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கும் வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு: பென் ஸ்டாக்ஸ்(கேப்டன்), ஜேக் பால், டேனி பிரிக்ஸ்,பிரைடன் கார்ஸ், கிராவிலி, பென் டக்கட், கிரேகரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டான் லாரன்ஸ், சகிப் முகமது, டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், மேட் பார்க்கின்சன், டேவிட் பெயின், பில் சால்ட், ஜான் சிம்சன், ஜேம்ஸ் வின்ஸ்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …