இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்குப் பிறகு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி எப்போது விளையாடுவர் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
தோனி கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வு பெறப்போகிறதா அல்லது தொடரப் போகிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு தோனி மௌனம் செலுத்திய வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மும்பையில் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது தோனியின் வருங்கால திட்டம் குறித்த கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.
அதற்கு அவர் ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள் என கூறினார். இதற்கு முன்னதாக தோனி வருங்காலம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி தோனி எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடரை காத்திருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் இந்தியா அணி முக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். ஜனவரி மாதம் மத்தியில்ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் தொடர்களிலும் , ஜனவரி இறுதியில் நியூஸிலாந்து அணிஉடன் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் இந்த தொடர்களின் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் ஜனவரி மாதம் என தோனி குறிப்பிட்டிருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…