பிரான்ஸ் ஓபன்.., பட்டத்தை வென்ற ஜோகோவிச்..!

Default Image

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். 

பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்- ரபேல் நடால் மோதினர். இந்த போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3-6, 6-3, 7-6,6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

பிரான்ஸ் ஓபன் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், 18 கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு வந்துள்ள ஐந்தாம் நிலை வீரர் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை என்ற கணக்கில் 6-7 , 2-6 சிட்சிபாசை எடுத்தார். பின்னர் அடுத்த மூன்று செட்களை 6 – 3, 6 – 2, 6 – 4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைபற்றி பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

goat vijay gbu ajith
kl rahul kantara
Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi