இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடனான விவகாரத்து குறித்து,அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவரான ஷிகர் தவான்,தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷா முகர்ஜி,தனது முதல் கணவரை பிரிந்து 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர்,கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் திருமண பந்தத்தில் இருந்து வந்த நிலையில்,தற்போது அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இதனை உறுதிப்படுத்தும் விதமாக,ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.அதில்,
நான் 2 வது முறை விவாகரத்து ஆகும் வரை விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்தேன்.
வார்த்தைகள் எப்படி இவ்வளவு சக்திவாய்ந்த அர்த்தங்களையும் சங்கங்களையும் கொண்டிருக்கும் என்பது வேடிக்கையானது. விவாகரத்து பெற்றவராக இதை நான் முதலில் அனுபவித்தேன். முதல் முறையாக நான் விவாகரத்து செய்தபோது நான் மிகவும் பயந்தேன். நான் தோல்வியடைந்ததாக உணர்ந்தேன், அந்த நேரத்தில் நான் ஏதோ தவறு செய்ததாக நினைத்தேன்.
நான் அனைவரையும் காயப்படுத்தியது போல் உணர்ந்தேன், சுயநலத்தையும் உணர்ந்தேன். நான் என் பெற்றோரை ஏமாற்றியதாக உணர்ந்தேன், நான் என் குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக உணர்ந்தேன்,விவாகரத்து மிகவும் அழுக்காக இருந்தது.
இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன்.இது மிகவும் கொடூரமானது.நான் இரண்டாவது முறையாக அதிக ஆபத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் நிரூபிக்க இன்னும் நிறைய இருந்தது. அதனால் எனது இரண்டாவது திருமணம் முறிந்தபோது மிகவும் பயமாக இருந்தது.இது என்னையும் திருமணத்துடனான எனது உறவையும் எப்படி வரையறுக்கிறது? என்று நினைக்க தோண்டியது.
இதனால், என்ன நடந்தது என்பதற்கான அவசியமான செயல்களையும் உணர்ச்சிகளையும் ஒருமுறை நான் என்னுடன் உட்கார்ந்து நான் நன்றாக இருப்பதைப் பார்க்க முடிந்தது,என் பயம் முற்றிலும் மறைந்துவிட்டதைக் கவனித்தேன். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நான் உண்மையில் அதிக அதிகாரம் பெற்றதாக உணர்ந்தேன் மற்றும் விவாகரத்து என்ற வார்த்தைக்கு நான் கொடுத்த அர்த்தம் என் சொந்தச் செயல் என்பதை உணர்ந்தேன்.
ஆயிஷா முகர்ஜிக்கு முதல் திருமணத்தில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.மேலும்,தவானுக்கும் அவருக்குமான திருமண உறவில் ஒரு பையன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…