தலையில் தாக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்தும் கேட்காததால், பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரேசர் கிளார்க் மற்றும் பிரான்சை சேர்ந்த மௌராட் ஆலிவ் ஆகியோருக்கு பலப்பரீட்சை நடந்துள்ளது. முதல் சுற்றிலேயே பிரான்ஸ் வீரர் இங்கிலாந்து வீரரை ஆக்ரோஷமாக தலையில் குறிவைத்து தாக்கியதால் இங்கிலாந்து வீரர் நிலை குலைந்துள்ளார்.
முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் நடுவர்களிடமிருந்து 10-9, 10-9, 10-9, 9-10, 9-10 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் பின் எதிர் வீரரை தலையில் தக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து 2-வது சுற்றிலும் அதேபோல் இங்கிலாந்து வீரரை பிரான்ஸ் வீரர் தலையில் தாக்கியுள்ளார். எனவே, இரண்டாவது சுற்று ஆட்டம் 2.56 நிமிடத்திலேயே நிறுத்தப்பட்டு, பிரான்ஸ் வீரர் ஆலிவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து வீரர் கிளார்க் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் வீரர் ஆலிவ், ரிங்கை விட்டு வெளியேறாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் இறுதியாக தனது தோல்வியை ஒப்பு கொண்டு அவர் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…