மீண்டும் களத்தில் தோனி..! எந்த தொடர் தெரியுமா…?

Default Image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பிறகு   விளையாடவில்லை. அதன் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணியுடன் விளையாடி உள்ளது.ஆனால் இந்த ஒரு தொடரில் கூட தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி  எப்போது விளையாடுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோனி மைதானத்தில் பயிற்சி செய்து போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால்  அடுத்த மாதம் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி  கண்டிப்பாக கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் தோனி இடம்பெறவில்லை இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா  லெவேன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃ ப் தி  வேர்ல்டு அணிக்கும்  இடையே 2 டி20  போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  ஆசியா கிரிக்கெட் அணிகளை சார்ந்த வீரர்கள் இடம் பெற உள்ளன. இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சில இந்திய விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டு உள்ளது.
அதில் தோனி, ஹார்திக்  பண்டியா , கோலி ,பும்ரா  ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பிசிசி அனுமதி கொடுத்தால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக தோனி  மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்