அந்த 6 சிக்சரில் எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாயே – யுவராஜ்சிங் முக்கிய தகவல்

Published by
Castro Murugan

கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது .இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கில் சமுக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவர்  2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்களை பற்றி பகிர்ந்துள்ளார் .

அவர்  2007 ஆம் ஆண்டு நடைபெற்ற  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்ததையும் ஸ்டூவர்ட்டின் தந்தை அதன் பிறகு கூறியதையும் பற்றி சுவாரஸ்யங்களை  பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளின்டாப் என்னை சீண்டினார் இதனால் கடும் கோபத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்தை ஒரு பதம் பார்த்துவிட்டேன் .எனக்கு அந்த 6 சிக்சர்களை அடித்த பின்பு மிகுந்த மகிழ்ச்சி காரணம் என்னவென்றால் அதற்கு முந்தைய சில வாரங்களுக்கு முன்னால்தான் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் ஒருநாள் போட்டியில் எனது ஓவரில்  5 சிக்சர்களை அடித்திருந்தார் .சிக்சர்களை அடித்த பின்பு பின்பு பிளின்டாப்பை பார்த்தேன் பின்பு  மாஸ்கரனாஸ் பார்த்தேன் அவர் சிரித்தார் .

பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் என்னை வந்து சந்தித்தார் . ஆவர் இத்தொடரின் நடுவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் என்னிடம் வந்து நீ என்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய்.இப்பொழுது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.

நான் இந்திய கிரிக்கெட் அணியின் பனியனில் சில வாசகங்களை எழுதினேன் அது என்னவென்றால் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5  சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது, அதன் வேதனையை நான் அறிவேன் .இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று எழுதினேன் .

இன்று ஸ்டூவர்ட் பிராட் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக  திகழ்கிறார்.இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை என்று யுவராஜ்சிங் கூறினார் .அவர் ஊரடங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சமூகவலைதளங்களில் நேரலையில் கேள்விகள் கேட்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

25 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

38 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

49 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

56 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago