“தோனிக்கு பதிலாக நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன்” – யுவராஜ்சிங் ..!

Published by
Edison
  • கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில்,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் தோல்விக்குப்பிறகு,இந்திய அணியை மீட்டெடுக்க,தொடக்க டி20 உலகக்கோப்பைக்கு புதிதாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என  பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.அப்போது,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக அறிவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாக,யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,யுவராஜ் சிங் 22 யார்ன்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியதாவது:

“கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.இதனால்,இந்திய அணியில் குழப்பம் நிலவியது.அதன் பிறகு,தொடக்க டி20 உலகக்கோப்பையும் இருந்தது. மேலும்,2 மாதகால இங்கிலாந்து பயணம் மற்றும் ஒரு மாதகால தென் ஆப்பிரிக்கா பயணம் இருந்தது.

அவ்வாறு,தொடர்ச்சியாக 4 மாதங்கள் வெளிநாடு பயணம் இருந்ததால், அப்போது அணியின் மூத்த வீரர்களான கங்குலி,டிராவிட்,சச்சின் உள்ளிட்டோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.இதனால்,டி20 உலகக்கோப்பைத் தொடரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனையடுத்து,2007 ஆம் ஆண்டிற்கான டி 20 கேப்டனாக பிசிசிஐ வாரியம் என்னை நியமிக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால்,அணியின் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.

எனவே,யார் கேப்டனாக இருந்தாலும்,அவரை 100 சதவிகிதம் ஆதரிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற 2007 உலகக் கோப்பை டி20 தொடரில், பிளிண்டாப் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தேன். இதனால், பிளிண்டாப் என்னைப் பார்த்து,’இங்கே வா உன் கழுத்தைத் திருகி எறிகிறேன்’ என்றார்,அதற்கு பதிலளிக்கும் வகையில்,  ‘என் பேட் எங்கெல்லாம் போகும் என்பதும் உனக்குத் தெரியும்’ என்று நான் கூறினேன்.

இதனையடுத்து,இனி வரும் ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.பின்னர்,பிராட் வீசிய முதல் பந்து அதிர்ஷ்டகரமாக மைதானத்திற்கு வெளியே பறந்தது. 2 வது பந்து ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது.தொடர்ந்து,3வது பந்திலும் சிக்ஸ் அடித்தேன்”,என்று தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,முதல் முறையாக கேப்டன் பொறுப்பு கிடைக்காத ஏமாற்றத்தை,யுவராஜ் சிங் தற்போது பகிர்ந்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

11 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

31 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

48 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago