கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும் ! ஆர்சிபியை விமர்சித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த்!!

Published by
அகில் R

க்ரிஷ் ஸ்ரீகாந்த் : ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 19-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்த போது பெங்களூரு அணி, சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வீழ்த்தியிருந்தார்கள். அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி பெற்று பிளே-ஆஃப் சுற்றிலிருந்தும் வெளியேறினார்கள்.

சென்னை அணியை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை பெங்களூரு அணியும், பெங்களூரு அணியின் ரசிகர்களும் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடினார்கள். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் ஒரு சிலர் அதை விமர்சித்து பேசி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரது யூடியூப் சேனலில் அவரது மகனான அனிருதா ஸ்ரீகாந்துடன் கிரிக்கெட் பற்றி விவாதித்த வீடியோவில் பெங்களூரு அணியை விமர்சித்து சில விஷயங்களை கூறி இருந்தார்.

அவர் கூறுகையில், “வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்கும் போது உங்கள் வாயை மூடிக்கொண்டு வெற்றியை தொடருங்கள், நீங்கள் செய்யும் ஒரு செயலில் இருந்து சத்தம் எழுப்பினால் உங்களால் அந்த வேலையை செய்து முடிக்க முடியாது. அதனால் கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு தான் விளையாட வேண்டும்.

நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால் வாழ்த்துக்கள், அதே நேரத்தில் நீங்கள் மோசமாக விளையாடியிருந்தால் அந்த விமர்சனத்தையும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் ஒருபோதும் வாயைத் திறந்து ஆக்ரோஷத்தைக் காட்டக்கூடாது. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது போல கருதினார்கள் ஆனால் தகுதி பெற்றவுடன் நாக் அவுட் ஆனார்கள்”, என்று அவர் கூறியிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago