ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் மட்டும் அதிரடியாக விளையாடி 477 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முந்தய ஆண்டுகளை விட இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை விரைவாக அடைந்த இளம் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 130 நாட்களில் ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு முன்னதாக, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தன்னுடைய 20 வயது 218 நாட்களில் 1,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ப்ரித்திவ் ஷா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…