டி20 போட்டியில் 3 ஓவரில் 2 விக்கெட் பறித்த யாக்கர் மன்னன் நடராஜன் ..!

Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டிதான் தமிழக வீரர் நடராஜனின் முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இப்போட்டியில் நடராஜன் 11-வது ஓவரை வீசிய ஆஸ்திரேலியா அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்தார். இதனால், நடராஜன் தனது முதல் டி20 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மேலும்,  நடராஜன் 15-வது ஓவரில் கடைசி பந்தில் ஆர்சி ஷார்ட் விக்கெட்டை பறித்தார்.  இந்நிலையில், இன்றைய போட்டியில் நடராஜன் 3 ஓவர் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை பறித்துள்ளார்.

கடந்த 02-ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தான் நடராஜன் முதல் சர்வேதேச போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் தனது முதல் விக்கெட்டாக மார்னஸ் மற்றும் இரண்டாவது விக்கெட்டாக ஆஷ்டன் விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்