முக்கியச் செய்திகள்

WorldCup2023: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. கோலி, கே.எல் ராகுல் அதிரடி..!

Published by
murugan

இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  உலகக்கோப்பையின் 5  வது லீக் போட்டி  சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்  மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் உடன்  வார்னர் கை கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 69 ரன்கள் சேர்க்கப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 41 எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க  நிதானமாக விளையாடிய ஸ்மித்  46 ரன்னில் ஜடேஜாவிடம் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மத்தியில் களம் கண்ட மிட்செல் ஸ்டார்க் மட்டும் 28 ரன்கள் எடுக்க இறுதியாக  ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் ஆல் அவுட்  ஆகி 199 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில்  ஜடேஜா 3 விக்கெட்டையும் , குல்தீப் , பும்ரா தலா  2 விக்கெட்டையும் , முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 200ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 4 பந்தில் இஷான் கிஷன் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் அடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க 2-வது ஓவரின் 3 பந்தில் ரோஹித்தும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இந்திய அணி 2 ரன் எடுத்து 3 விக்கெட்டை கொடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி கே.எல் ராகுல் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடிய கோலி 116 பந்திற்கு  85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும். இவர்கள் இருவர் கூட்டணியில் 165 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். களத்தில் சிறப்பாக விளையாடிய  கே.எல். ராகுல் 115 பந்திற்கு 97* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும் அதேபோல ஹர்திக் பாண்டியா 11* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு உலகக்கோப்பின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago