“கொரோனா பரவலுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும்”- ஐசிசி!

Published by
Surya

கொரோனா பரவலுக்கும் மத்தியில் நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள், தீவிரமாக விளையாடியது. இதில் முதலில் நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வானது. அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தேர்வானது.

நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த இறுதிப்போட்டி, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடனும், வெற்றிகரமாகவும் நடத்துவது என்பதை இங்கிலாந்து, இந்தியா உட்பட சில கிரிக்கெட் வாரியம் செய்து காட்டியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்றும், இதுக்குறித்து இங்கிலாந்து அரசிடம் ஆலோசித்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

16 hours ago