ஓய்வை அறிவித்தார் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன்!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக்கோப்பை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் இயான் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் இயான் மோர்கன். அயர்லாந்து நாட்டில் பிறந்த இயான் மோர்கன், 2009 ஏப்ரல் வரை அந்நாட்டு அணிக்காக விளையாடி வந்தார். 2009 முதல் கடந்த 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

em

16 டெஸ்ட் போட்டிகளில் 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 7,701 ரன்களும் எடுத்துள்ளார் இயான் மோர்கன். இதுபோன்று, 115 டி20 போட்டிகள் விளையாடியுள்ள மோர்கன் 10,159 ரன்கள் எடுத்துள்ளார். மோர்கன் 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அவர்களின் முதல் ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெறுவதற்கு வழிநடத்தினார் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.

126 ஒரு நாள் போட்டிகள், 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 118 வெற்றிகளை அணிக்கு பெற்று தந்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த SA20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக மோர்கன் கடைசியாக  விளையாடிய அவர், 128 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், தனது 36 ஆவது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago