இன்று அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து பலபரீச்சை

Default Image

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இன்று இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியானது இந்திய நேரப்படி, காலை 9.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் துவங்குகிறது.டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி இதுவரை இறுதி போட்டிக்கு முன்னேறியது இல்லை.இம்முறை தான் முன்னேறும் நோக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே மும்முரம் காட்டி  வருகிறது.எனவே இந்தப் போட்டி, இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு சவாலாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு, ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியின் முடிவில்  வெற்றிப்பெறுகின்ற அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழையும் அவ்வாறு நுழையும் அணிகள் எது என்று இன்றைய போட்டி முடிவு செய்யும்.மார்ச்.,8 டி20-இறுதிப்போட்டி நடைபெறுகிறது அன்றைய தினம் மகளிர் தினம் என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்