அடுத்த மாதம் மும்பையில் பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம்..?

Published by
murugan

பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், கடந்த ஏலத்திற்கு பிறகு மீதமுள்ள ரூ. 1.5 கோடியை ஐந்து அணிகளுக்கும் வழங்கப்படும். சமீபத்தில், அணிகள் தங்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன. அதில் ஐந்து அணிகள் 60 வீரர்களைத் தக்கவைத்துகொண்டனர். 29 வீரர்களை விடுவித்துள்ளன. தக்கவைக்கப்பட்ட 60 வீரர்களில் 21 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்.

டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் ஏலம் நடைபெற்றால் ஒன்பது வெளிநாடு வீரர்கள் உட்பட 30 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படள்ளனர். பெண்கள் பிரீமியர் லீக் தொடக்க சீசனில், ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி வழங்கப்பட்டது. சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே இந்தப் பணத்தை முழுமையாகப் பயன்படுத்தினர். மற்ற மூன்று அணிகளுக்கு மீதம் வைத்து இருந்தனர். அதன்படி, குஜராத் ஜெயன்ட்ஸிடம் ரூ. 5 லட்சமும், டெல்லி கேப்பிடல்ஸிடம் ரூ. 35 லட்சமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் ரூ. 10 லட்சமும் இருந்தது.

தொடக்க சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த குஜராத் ஜெயண்ட்ஸ் தங்கள் அணியில்  பாதி வீரர்களை விடுவித்ததால் அதிகபட்சமாக ரூ. 5.95 கோடி வைத்துள்ளனர். அவற்றை வைத்து 10 வீரர்களை வாங்க வேண்டும். இதில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் உள்ளன. பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்ற யுபி வாரியர்ஸ், ரூ. 4 கோடியை வைத்துள்ளனர். அதை அவர்கள் வெளிநாட்டு வீரர் உட்பட ஐந்து வீரர்களை வாங்க  பயன்படுத்தலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோரைக் கொண்ட நட்சத்திரப் அணிகளாக இருந்தும் கடந்த ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. இந்த அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஏழு வீரர்களை வாங்க ரூ. 3.35 கோடி உள்ளது. இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி அணி வெளிநாடுகளில் ஒரு வெளிநாட்டு வீரர்கள் உட்பட மூன்று இடங்களை நிரப்ப ரூ.2.25 கோடியை வைத்துள்ளது.

நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி 2.1 கோடியை வைத்து ஐந்து வீரர்களை  வேண்டும். இதில் ஒரு  வெளிநாடு வீரர் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணி ரூ. 3.4 கோடிக்கும், குஜராத் ஜெயண்ட்ஸ் ஆஷ்லே கார்ட்னர் ரூ. 3.2 கோடிக்கும் , மும்பை அணி  நாட் ஸ்கிவர்பிரண்ட்டை  ரூ. 3.2 கோடிக்கும் எடுத்தனர்.

இந்த ஆண்டும் ஐந்து அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில் போட்டியின் வடிவம் முதல் சீசனைப் போலவே இருக்கும். ரவுண்ட் ராபின் முறையில் ஐந்து அணிகளும் தலா 2 முறை மோதும். அதன் பிறகு டாப்-3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், அதே நேரத்தில் 2-ம் மற்றும் 3-ம் இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

Published by
murugan

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

12 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

13 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

13 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

14 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

16 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

17 hours ago