#Womens Asia Cup 2022: இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

ஆசியக்கோப்பை மகளிர் தொடர் 2022, இன்று அக்-1 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளான இன்று இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தது. இதன் படி களமிறங்கிய இந்திய அணி      20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். இலங்கை அணியில், ஒஷதி ரணசிங்கே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 30 ரன்களும், ஹர்ஷிதா மாதவி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்களும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரக்கர் தலா 2 விக்கெட்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ஆட்ட நாயகனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் 2புள்ளிகளுடன் (3.443NRR) முதலிடத்திலும், இந்தியா 2 புள்ளிகளுடன் (2.050NRR) இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.