8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம்!!ஆனா முடியல!!புலம்பும் ரோகித் சர்மா

Published by
Venu

இந்த போட்டி மிகவும் கஷ்டமான போட்டி  என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி  3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.நேற்று  முதலாவது  டி20 போட்டி நடைபெற்றது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் செரிபெர்ட் மற்றும் கெலின் முன்ரோ களமிறங்கி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். கெலின் முன்ரோ 34 ரன்கயிலும் , டிம் செரிபெர்ட் 84 ரன்களிலும் , கேன் வில்லியம்சன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது இந்திய அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  இந்திய அணி  19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  139 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் தோனி 39 ரன்கள் அடித்தார்.இதன்மூலம்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்த போட்டி மிகவும் கஷ்டமான போட்டி ஆகும். அதேபோல் தொடர்ச்சியாக நாங்கள்  விக்கெட்களை இழந்துவிட்டோம். இதுபோன்ற இலக்குகளை முந்தைய  காலங்களில் சேஸ் செய்திருக்கிறோம். அதனால்தான், 8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம். எவ்வளவு இலக்கு இருந்தாலும் அடித்துவிடலாம் என நினைத்தோம். ஆனால், சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. மிகப்பெரிய இலக்க விரட்டும் போது அதுதான் முக்கியமானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago