சச்சின், ஹிட்மேன் சாதனை பட்டியலில் இடம்பெறுவாரா கிங் கோலி.?

Published by
செந்தில்குமார்

விறுவிறுப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்தும், சமன் செய்தும் வருகிறார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்தார். அதேபோல இந்த சாதனையை நாளை நடைபெறவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஒரே ஒருநாள் போட்டியில் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைக்கவுள்ளார். கடந்த 12ம் தேதி நடந்த போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த 51 ரன்கள் மூலம் நடப்புத் தொடரில் அவர் 594 ரன்களை எட்டினார்.

இதில் ஆட்டமிழந்ததன் மூலம் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது. இருந்தும் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் 591 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த குயின்டன் டி காக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். மொத்தமாக 594 ரன்கள் எடுத்துள்ள கோலி, 2 சதம் மற்றும் 5 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த சாதனையை படைக்க இன்னும் 7 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே, நாளை (15ம் தேதி) நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்த சாதனையைப் படைப்பார். மேலும், 2019-ம் ஆண்டு ரோஹித் சர்மாவும், 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் 600 ரன்களை கடந்தனர். இப்போது விராட் கோலியும் 600 ரன்களை தாண்டினால் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

4 minutes ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

26 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

3 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago