இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இங்கு அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி ஒரு நாள் போட்டி தொடங்குகிறது.கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருப்பதால், இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இலங்கைக்கு பிசிசிஐ அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தான் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது ” இந்தியாவின் 2ம் கட்ட கிரிக்கெட் அணி இங்குவந்திருப்பது நம் கிரிக்கெடுக்கு ஏற்பட்ட அவமானம். டெலிவிஷன் மார்க்கெட்டிங் தேவைகளுக்காக இப்படிப்பட்ட அணியுடன் விளையாட ஒப்புக் கொண்டதற்காக நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே வன்மையாக கண்டிக்கிறேன். இங்கிலாந்துக்கு சிறந்த அணியைஅனுப்பி விட்டு பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கு நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே நான் சாடுவேன்”. என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…