இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆம் டி-20 போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனைதொடர்ந்து 4 ஆம் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளை வைத்து பார்த்தால் 2 ஆம் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங், சற்று சொதப்பலாக உள்ளது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல், விக்கெட்களை வாரி வழங்குகிறது. மேலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் டக் அவுட் ஆகினார்.
மிடில் ஆடரை பொறுத்தளவில் இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதில் சூர்யகுமார்யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் பந்துவீச்சில் சர்துல் தாக்கூருக்கு பதில் தீபக் சாகர் அல்லது நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…