டி20I: இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக ‘ஏ’- பிரிவில் (Group-A) அணிகளான இந்தியா அணியும், அயர்லாந்து அணியும் இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகிறது.
இந்த தொடரில் இந்த 2 அணிகளுக்கும் இதுவே முதல் போட்டியாகும். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாட போகும் முதல் டி20 போட்டி என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது கிடைத்துள்ளது.
டி20 போட்டிகளில் பலமாக இருக்கும் இந்திய அணியை இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். இந்த இரு அணிகளும் இது வரை 7 டி2ஓ உலகக்கோப்பை போட்டியில் சந்தித்துள்ளனர், அதில் 7 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வங்காளதேசத்துடனான பயிற்சி போட்டியில் இந்திய அணியில் நன்றாக விளையாடிய முதல் 11 வீரர்களே இந்த லீக் சுற்றின் முதல் போட்டியிலும் தேர்வாவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணியில் எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்களை கீழே பார்க்கலாம்.
இந்தியா அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
அயர்லாந்து அணி :
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விகேட்கீப்பர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, ராஸ் அடேர், பேரி மெக்கார்த்தி, மார்க் அடேர்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…