தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடந்தது.இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.பின் இரண்டாவதாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது ஆட்டத்தில் 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இலக்காக 438 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5-வது நாள் மற்றும் இறுதி ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை டிரா செய்ய கடுமையாக விளையாடியது. இந்த அணி ரன்களைக் குவிப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியது. எனவே ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் , கடைசி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால்,தென் ஆப்பிரிக்க அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது டெஸ்டை வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. சமனில் முடிந்த இந்த போட்டி கிரிகெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…