BCCI [file image]
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணி அனைவரும் எதிர்ப்பார்க்கபட்டது போல இருந்தாலும் ஒரு சில மாற்றங்களை விமர்சித்து ரசிகர்கள் இணையத்தில் பிசிசிஐயிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியில் ஸுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இவர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 146.79 ஸ்ட்ரைக் ரேட்டில் 298 ரன்கள் எடுத்து அதிலும் 42.57 சராசரியில் விளையாடி வருகிறார். ஆனால் ருதுராஜ் 9 போட்டிகளில் விளையாடி 149.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 447 ரன்களை எடுத்து 63.85 சராசரியில் விளையாடி வருகிறார்.
இதனை கருத்தில் கொண்டு கில்லை ஏன் இந்திய அணியில் எடுக்க வேண்டும்? என்றும் ருதுராஜை ஏன் அணியில் எடுக்கவில்லை ?என்றும் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான எகனாமியில் பந்து வீசிய நடராஜன் இடம்பெறவில்லை ஆனால் அவருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே நேரம் முகமது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக பந்து வீச வில்லை ஆனால் அவரை அணியில் எடுத்துள்ளனர் ஆனால் அவருக்கு பதிலாக சந்தீப் ஷர்மாவை அணியில் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும், குறிப்பாக நன்றாக விளையாடி வரும் ருதுராஜை எடுக்காததான் காரணத்தை விலகுமாறு பிசிசிஐக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…