இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.முதல் நாளான இன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுதான் இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
டுட்டு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஆளுமை நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர். ஆப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனப் பிரிவினை மற்றும் பாகுபாடு கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.அவரது முயற்சிகளுக்காக, டுட்டுவுக்கு 1984 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இன்று அவர் தனது 90 வது வயதில் காலமானார்.
இது பற்றி ஜனாதிபதி ரமபோசா கூறுகையில் , டுட்டு “ஒரு ஆன்மீக சின்னம், நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் மற்றும் உலகளாவிய மனித உரிமைப் பிரச்சாரகர் ஆவார். சமமற்ற தேசபக்தர்; கிரியைகள் இல்லாத விசுவாசம் இறந்துவிட்டது என்ற விவிலிய நுண்ணறிவுக்கு அர்த்தம் கொடுத்த கொள்கை மற்றும் நடைமுறைவாதத்தின் தலைவர்” என்று புகழ்ந்துள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 46 ரன்களுடனும் ,கேஎல் ராகுல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இந்திய அணி விக்கெட் இழப்பின்றி உணவு இடைவெளிக்கு முன்னர் வரை 83 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…