ராகுல் டிராவிட் ஒப்பந்தம் முடிவு.. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்..?

Published by
murugan

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைந்தது. டிராவிட் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்கலாம். 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்:

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த 2021-ஆம் ஆண்டு  டி20 உலகக் கோப்பையில் இந்தியா லீக் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு அவரது ஒப்பந்தம் முடிந்தது. பிறகு பிசிசிஐ அவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கவில்லை. இதற்குப் பிறகு, ராகுல் டிராவிட் 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.டிராவிட்டிடம் இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு டிராவிட்டின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்தியா அணி உலகக்கோப்பையை கைப்பற்றி இருந்தால் டிராவிட்டை மீண்டும் பயிற்சியாளராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கலாம். ஆனால் இப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். 2019 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியுடனான ஒப்பந்தம் முடிந்தபோது பிசிசிஐ மீண்டும் சாஸ்திரியை தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பார் என அறிவித்தது.

எதிர்கால குறித்து யோசிக்க நேரமில்லை:

உலகக்கோப்பை போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிறிது காலம் உலகக்கோப்பையில் முழு கவனம் செலுத்தினேன். அணியை தயார்படுத்துவதற்காக அயராது உழைத்தேன். இது தவிர வேறு எதையும் நான் நினைக்கவில்லை. எதிர்கால திட்டங்களை பற்றி யோசிக்க கூட நேரத்தை செலவிடவில்லை.

தலைமை பயிற்சியாளரின் பதவி காலத்தை நீட்டிப்பதா.? அல்லது நீக்குவதா.? என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதி போட்டியிலும், T-20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள்  உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் விளையாடியது.

ஆனால் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago