இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத நான்கு பேர் ஆவார்கள். ஒருநாள் போட்டிகளை காட்டிலும், டெஸ்ட் போட்டிகளில் இந்த நால்வரின் பங்கு அசாத்தியமானது. இந்தியா தோற்று விடும் என்று நினைத்த போதெல்லாம், இந்த கூட்டணி வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இந்த நால்வரும் இணைந்து விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் எனக் கருதலாம். இவர்கள் நால்வரும் இருந்தபோது, இந்த டெஸ்ட் அணி பல வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்தது எனக் கூறலாம். ரசிகர்கள் எப்போதும் இந்த கூட்டணியை மறக்க மாட்டார்கள்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சௌரவ் கங்குலி ‘என் வாழ்க்கையின் மிக சிறந்த தருணம். அதன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.’ என தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி னார்கள்.
இந்த கூட்டணியில் முதலில் ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி இப்போது பிசிசிஐ-ன் தலைவராக இருக்கிறார். பின்பு விவிஎஸ் லட்சுமணன் ராகுல் டிராவிட் மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்த நால்வரின் கூட்டணியில் மிக சிறந்த திறமை என்னவென்றால் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் கூட எளிதாக சமாளித்து விடக் கூடியவர்கள். அதே போல இவர்களது காலகட்டத்தில் தான் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். கங்குலி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…