KKRvsRR[file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது.
நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன் காடன் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இந்த வருட புளிப்பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்தில் இருந்து வருகிறது.
மேலும், இந்த இரு அணிகளும் ஒரே ஒரு தோல்வியை மட்டும் தழுவி உள்ளது. கடுமையான இந்த இரு அணிகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய போட்டி என்பது இன்றைய நாளில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், இதை இரு அணிகளில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள், திணற வைக்கும் வைக்கும் பவுலர்கள் என சமமாகவே இருந்து வருகின்றனர்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 14 முறை கொல்கத்தா அணியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 1 போட்டியானது முடிவில்லாமல் இருக்கிறது. இதனால் நேருக்கு நேர் அடிப்படியில் பார்க்கும் போது அதை சமன் செய்ய ராஜஸ்தான் அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொல்கத்தா அணி வீரர்கள்
பிலிப் சால்ட்( விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ராஜஸ்தான் அணி வீரர்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…