‘எப்போதெல்லாம் ரன் தேவையோ .. அவரோட பேட் தான் கேட்பேன்’ ! சதம் அடித்த பின் அபிஷேக் பேட்டி!

Published by
அகில் R

அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அவரது விளையாட்டை குறித்து பேசி இருந்தார்.

ஜிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து விளையாடினார். அவர் வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவர் 43 பந்துக்கு 72 ரன்களில் இருந்த போது, தொடர்ந்து 3 ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் சர்வேதச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அபிஷேக் சர்மா, அவரது விளையாடிய அந்த ஆக்ரோஷமான விளையாட்டினை குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய போது, “நான் இன்று சுப்மன் கில்லின் பேட்டை வைத்ததுதான் விளையாடினேன், இதை நான் முன்பு செய்தேன். எனக்கு எப்போதெல்லாம் ரன் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம், நான் அவரது பேட்டை தான் கேட்பேன்.

இது எனது சிறப்பான ஆட்டம் என்று நினைக்கிறேன், நேற்று நாங்கள் சந்தித்த தோல்வி, எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இன்று என்னுடைய நாள் என்று நான் உணர்ந்தேன், அதை மனதில் வைத்து கொண்டு விளையாடினேன். டி20 போட்டி என்பது வேகமாக ரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன் இதை நான் இறுதி வரை கொண்டு சென்றேன். என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நான் நன்றியை கூறி கொள்ள விரும்புகிறேன்.

நான் எப்போதும் என் திறமையை நம்புகிறேன், அது என் நாளாக இருந்தால், அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதனை அடித்து விளையாடுவேன்” என்று கூறினார். அபிஷேக் ஷர்மாவின் இந்த விரைவான சதத்தால் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், கே.எல். ராகுலுக்கு பிறகு 4-வது வீரராக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த டி20 தொடரின் கேப்டனான சுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும் 12 வயது முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாட தொடங்கினார்கள். அன்று முதல் அபிஷேக் சர்மாவுக்கு ரன் தேவைப்பட்டால் சுப்மன் கில்லிடம் பேட் வாங்கி தான் விளையாடுவாராம் அதை தான் அபிஷேக் பேசுகையில் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…

19 mins ago

ENGvsAUS : ‘நேர்மையா விளையாடுங்க’…ஆஸ்திரேலிய வீரரை விளாசிய ரசிகர்கள்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

24 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவிடம் அடி வாங்கிய பாடிகாட்.. மனோஜ் பல்பு வாங்கினார். !

சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில்  கீழே விழுந்தார்  பாடிகார்ட்.. ஒரே அடியில்…

25 mins ago

ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு., 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்..,

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…

1 hour ago

ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!

லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…

1 hour ago

பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

1 hour ago