#Cricket Update:வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது எங்களுக்கு கசக்கவில்லை -விராட் கோலி

Published by
Dinasuvadu desk

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.இந்திய கேப்டன் விராட் கோலி இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .

சர்ச்சையும் விராட்கோலி பதிலும் :

ind vs eng 3rd test

அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டில் ஆடுகளம் இரண்டு நாட்களுக்குள் பகல்-இரவு போட்டி முடிந்ததும் ஒரு முக்கிய பேசும் பொருளாக மாறியது.

இது பற்றி விராட் கோலி கூறுகையில் ,நானும் எனது அணியும் வெற்றிபெற விளையாடுவதால்,இந்த மாதிரியான சலுகைகள் குறித்த கேள்விகளுக்கு எந்த விளக்கமும் அளிக்க மாட்டேன் என்று கூறினார்.

நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் ?

மேலும் அவர் கூறுகையில் ,நீங்கள் வெற்றிபெற விளையாடுகிறீர்களா அல்லது ஆட்டத்தை ஐந்து நாட்களுக்கு எடுத்துச் செல்கிறீர்களா?”  “நாங்கள் வெற்றி பெற விளையாடுகிறோம்.இந்தியா வெற்றிபெறும் போது மக்கள் ரசிக்க வேண்டும், எத்தனை நாட்களில் போட்டி முடிந்தாலும் பரவாயில்லை என்றார் .”

நீங்கள் 4 அல்லது 5 ஆம் நாட்களில் வென்றால், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், ஆனால் அது இரண்டு நாட்களில் முடிந்தால், எல்லோரும் அதை விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர் என்று கூறினார்.

எங்களுக்கு கசக்கவில்லை:

“நியூசிலாந்தில் நாங்கள் மூன்று நாட்களில் தோற்றபோது எங்கள் மக்கள் கூட ஆடுகளத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று நான் நம்புகிறேன்,”பேட்ஸ்மேன்களின் திறமையை ஆட்டத்தில் நிலவும் நிலைமையை விட மேலாக பார்க்க வேண்டும் என்றும், மேலும் வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது தனது அணிக்கு ஒருபோதும் அது கசக்கவில்லை என்று கூறினார்.

இந்தியா தற்போது தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நான்காவது டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

8 minutes ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

2 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

2 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

3 hours ago

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

4 hours ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

4 hours ago