என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Published by
அகில் R

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் . இந்த தொடரில் தகுதி அடைந்துள்ள அணிகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல்-30 ம் தேதி அன்று பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதனால் பலவித கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

இதை தொடர்ந்து இந்திய அணியை அறிவித்த பிறகு, அந்த இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார்கள், இதனால் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல்-30 தேதி, அதாவது நேற்று முன்தினம் இந்திய அணியை அறிவித்த அன்று ஐபிஎல் தொடரின் இரவு போட்டியாக மும்பை அணியும், லக்னோ அணியும் மோதியது.

இந்த போட்டியில் மும்பை அணியில் உள்ள இந்தியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இந்த 3 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் தான். ஆனால் பிசிசிஐ அணியை அறிவித்த பிறகு இந்த 3 வீரர்களும் அன்றைய போட்டியில் 10 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்து சொதப்பினார்கள். மேலும், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் மட்டும் சற்று சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அதே நேரம் நேற்றைய சென்னை, பஞ்சாப் போட்டியை பார்க்கையில்,  அங்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் பஞ்சாப் அணியில் உள்ள அர்ஷிதீப் சிங் என இந்த 3 வீரர்களும் நேற்றைய போட்டியில் சொதப்பினார்கள். அதே போல் சிவம் துபே 1 ஓவர் பந்து வீசி அதில் 1 முக்கிய விக்கெட்டையும் எடுத்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் இவர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் ரசிகர்கள் இந்த 6 வீரர்களையும் சுட்டி காட்டி, ” என்னதான் ஆச்சு ? இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு ஏன் இப்படி மோசமாக விளையாடுகிறீர்கள்” என்று சமூகவலைதளங்களில் அவரகளது கருத்தை வருத்ததுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு ரசிகர்கள் பிசிசிஐ இப்பொது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

14 minutes ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

35 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

3 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

4 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

4 hours ago