டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிததது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 204 ரன்னில் வெஸ்டிண்டிஸ் அபார பந்துவீச்சில் சுருண்டது என்றே கூறலாம், மேலும் வெஸ்டிண்டிஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை எடுத்து வெஸ்டிண்டிஸ் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் 65 ரன்கள் அடித்து தனது அரை சத்தத்தால் மிரட்டினார் என்றே கூறலாம், மேலும் அவரை தொடர்ந்து ஷேன் டாவ்ரிச்னும் 61 ரன்கள் எடுத்து இருவரின் கூட்டணியில் 318 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 313 ரன்களை சேர்த்தது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் வெஸ்டிண்டிஸ் வெற்றிபெற்றுள்ளது, மேலும் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…