சாம்பியனின் மனநிலையில் விளையாடுகிறோம் ..! போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் கூறியது இதுதான் !!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.

நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரி வர விளையாடாததால் அணி பேட்டிங்கில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. இதன் விளைவால் 17.3 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியில் பந்து வீசிய அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனை தொடர்ந்து எளிய இலக்கான 90 ரன்களை எடுப்பதற்கு டெல்லி அணி களமிறங்கியது. இந்த எளிய ஸ்கோரை எளிதில் எடுக்க வேண்டும் என்று டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. இதனால் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து 6 வ்க்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த் போட்டியில் 11 பந்துக்கு 16 ரன்கள் மட்டும் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங்க் செய்ததன் அடிப்படியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் போட்டிக்கு பின் வெற்றியின் காரணங்களை குறித்தும் பேசி இருந்தார். அவர் பேசுகையில், ” இன்று நான் மகிழ்ச்சி அடைய நிறைய சம்பவங்கள் இருக்கிறது. நாங்கள் ஒரு சாம்பியனின் மனநிலை எப்படி இருக்குமோ அதை போல ஒவ்வொரு போட்டியிலும் கவனம் செலுத்தி வருகிறோம், அதே போல எங்கள் அணியினரும் அதை களத்தில் செயல்படுத்துவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்களின் பந்துவீச்சு நிச்சயமாக இதுவரை இல்லாத போட்டிகளில் ஒரு சிறந்த  ஒன்றாகும். இது இன்னும் போட்டியின் வெற்றி சதவீதத்தை கூட்டியது. இப்பொது எனது முக்கிய பொறுப்பு என்னவென்றால் மறுவாழ்வில் இருந்து திரும்பி வந்துவிட்டேன் அதே நேரம் முன்பை விட சிறப்பாக இப்பொது விளையாட வேண்டும் என்பது தான். இந்த போட்டியில் இலக்கு சிறியது என்பதால் இதற்கு முன் தோல்விகளால் குறைந்து உள்ள ரன்ரேட்டை உயர்த்துவதை பற்றி விவாதித்தோம். அதே போல அதை செயல்படுத்தியும் காட்டினோம்.

மேலும், அகமதாபாத்தில் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்த மைதானம் மற்றும் இங்குள்ள சூழ்நிலைகள் அற்புதமாக இருக்கிறது. இந்த சூழலில் அதிக விளையாட்டுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது போன்ற போட்டிகளில் நிறைய கற்றுக்கொண்டு அதை மேம்படுத்த விரும்புகிறோம்.”, என்று போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

21 minutes ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

46 minutes ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

1 hour ago

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

8 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

10 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

13 hours ago