வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம்! அப்படி நடந்தால் கோலி சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார்!

Published by
லீனா

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தபெட்டியில், கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து இந்திய கேப்டன் விராட் கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் விராட் கோலியை பகைத்துக் கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்பதால் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.  இதற்கு பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கிளார்க்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், கிளார்க்கின் இந்த சர்ச்சை பேச்சு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆஸ்திரேலியாவில், இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் நல்ல விதமாக நடந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் நான் பார்க்க வில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் பந்து வீச்சில் ஈடுபட்டு அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள பெயின், ‘யார் நட்பு பாராட்டுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில் அப்படி நடந்தால் அதன் மூலம் சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார் கோலி. அந்த தொடரில் பரபரப்பான தருணங்கள் பல இருந்தன. நாங்கள் யாரும் எதிலும் பின்வாங்கவில்லை. விராட் கோலிக்கு பந்துவீசும் போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.

Published by
லீனா

Recent Posts

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

18 minutes ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

53 minutes ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

1 hour ago

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

2 hours ago

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

2 hours ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago