கிரிக்கெட்

இந்த நாளுக்காக இரண்டரை ஆண்டு காலமாக தயாராகி வந்தோம் -ரோஹித் ஷர்மா..!

Published by
murugan

நாளை நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். மேலும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதியானவை.  எங்களிடம் 2011 முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம். நாங்கள் லெவன் அணியை முடிவு செய்யவில்லை.

இரண்டரை ஆண்டு தயாராகி வந்தோம்:

15 பேரில் இருந்து யார் வேண்டுமானாலும் விளையாடலாம். நடப்பு உலககோப்பை தொடரில்  பந்துவீச்சாளர்கள் எங்களுக்காக சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். நாங்கள் முதல் நான்கு, ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்தோம். அப்போது எதிரணியை 300 ரன்களுக்கு கீழே கட்டுப்படுத்துவது இந்தியாவில் எளிதானது அல்ல. எங்கள் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

நாங்கள் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை எடுக்க விரும்பும்போது எல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட்டனர். நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஏற்கனவே டி20 இறுதிப்போட்டி உள்ளிட்டவற்றில் விளையாடியது மிகுந்த அனுபவத்தை தந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் எதிர்கொள்ள இரண்டரை ஆண்டு காலமாக தயாராகி வந்தோம். இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்பிக்கை” தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

29 minutes ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

2 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

2 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

3 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

3 hours ago