நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் அதிரடியான ஆட்டம் குறித்து ஆனந்த் மகேந்திரா ட்வீட்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
கடைசியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி 6,4,2, மற்றும் 4 ரன்களை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தோனியின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய தொழிலதிபரும், மகிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். MSDhoni அற்புதமான முடிவு’ என பதிவிட்டுள்ளார்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…