23 வயதான ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 கிரிக்கெட் வேர்ல்டு கப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம் பெற்றார். 2017-ல் T20-யிலும், 2018-ல் ஒன்டே இன்டர்நேஷனல்போட்டிகளிலும், தற்பொழுது IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியதாவது, ” ரிஷப் பண்ட் சில மேட்ச்களில் சரியாக விளையாடாத காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை எடை போட வேண்டாம். அவர் கண்டிப்பாக உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்து விளங்குவார். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சில இக்கட்டான சூழ்நிலைகளில் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றதை நாம் அறிந்தோம்.
மேலும் பேசிய அவர்,ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்ற முறையில் அவர் விளையாட வருகையில் அவருக்குள் இருக்கும் நெருப்பை எதிரணியின் கேப்டனால் உணர முடியும். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடியதை வைத்து அவரைப்பற்றி தீர்மானிக்க வேண்டாம். ஒரு முறை பாதுகாப்பும், ஆதரவும் இருப்பதை உணர்ந்தால் தானாகவே எல்லா மேட்ச்களிலும் வெற்றி பெறுவார். அவர் லிமிடெட் ஓவர்களில் இறங்கி பினிஷிங் செய்யும் திறமை உள்ளவர். இந்திய அணி மேட்ச்களின் இறுதியில் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரையே முற்றிலுமாக நம்பியுள்ளது. அந்த வரிசையில் ரிஷப் பன்ட்டை சேர்த்தால் மேட்ச்களின் இறுதியில் கண்டிப்பாக அதிசயத்தைக் காணலாம். ” என்று ரிஷப் பன்ட் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் புகழ்ந்து கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…