ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் தனது நண்பர் ஏபி டி வில்லியர்ஸுடன் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய அனுபவங்கள் பகிரந்துள்ளார். அப்போது அவர் ‘ ஆர்.சி.பி அணியுடன் விளையாடுவதும் சிறப்பாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.
ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே வாளையாடுவேன். என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதைக்கேட்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…