உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் போதாது மற்ற வீர்ரகளிடம் இருந்து ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் , ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் ஆனால் அணியில் உள்ள அனைவரும் ஒத்துழைக்காமல் பெரிய அளவில் வெற்றி காண முடியாது.
ஒரு தனிப்பட்ட நபரின் திறமையால் மட்டுமே தொடரை வெல்ல முடியாது. மற்றவர்களின் ஒத்துழைப்பு முக்கியமான நேரத்தில் இல்லாவிட்டால் கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் 1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டு உலக கோப்பையில் தனக்கு ஏற்பட்ட சுமையை போல விராட் கோலிக்கும் ஏற்படும்.
நம்மிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் உள்ளார்கள். நம்பர் 4 என்பது வெறும் எண்கள் மட்டும் தான் வீரர்களை மாற்றி மாற்றி இறக்கிக் கொள்ளலாம் அது ஒரு முக்கியமான பிரச்சனை இல்லை.
4,6 மற்றும் 8 என எந்த இடங்களில் இருந்து இறக்கினால்நம்ம வீரர்கள் விளையாடுவார்கள். சூழ்நிலையை புரிந்து விளையாடுவது தான் முக்கியம் . நம்முடைய அணியில் 10 வருட அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர்.
மேலும் குல்தீப்,சாஹல் , ஹர்திக் பாண்டியா ஆகிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள்.உலக கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…