விராட் கோலி ரிட்டையர் ஆக வேண்டும் – ஷாஹித் அப்ரிடி.!

Published by
Muthu Kumar

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

விராட் கோலி கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். விராட் இந்த ஆசியக் கோப்பை போட்டியில் மொத்தம் 5 போட்டிகளில் 276 ரன்கள் குவித்தார். அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மொஹம்மது ரிஸ்வானை(281ரன்கள் 6 போட்டிகள்) அடுத்து 2ஆவது இடத்தில உள்ளார். அதில் அவரது முதல் டீ-20 செஞ்சுரியும் அடங்கும். மேலும் அது அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விராட் கோஹ்லி யின் 71 ஆவது செஞ்சுரி ஆகும்.

இதற்கு முன் அவர் அடித்த செஞ்சுரி நவம்பர் 2019 இல் வந்தது. அதன் பிறகு மிகப்பெரிய ஸ்கோர்களை அடிக்க விராட் கோலி சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது பார்ம் பெரிதும் கேள்வியாகவே இருந்து வந்தது. தற்போது மீண்டும் அவர் 3 வருடங்களுக்கு பின் ஆசியக் கோப்பையில் அந்த 71 ஆவது செஞ்சுரியை அடித்துள்ளார்.

தற்போது 33 வயதான விராட் கோலி  ஆரம்ப கட்டத்தில் இந்த பெயரை அடைய சிறிது காலம் தேவைப்பட்டது. மேலும் விராட் கோலி, தோனி அணியில் இருந்து ரிட்டையர் ஆகும் முன்பே இந்திய அணியின் முகமாக இருந்து வருகிறார். விராட் கோலி தற்பொழுது கிட்டத்தட்ட 24,000 ரன்களுடன் பேட்டிங்கில் உச்சத்தில் உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்” என கூறியுள்ளார்.

 

Published by
Muthu Kumar

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago