விராட் கோலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் இந்தியா சார்பில் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ஆடவர் அணிக்கு விராட் கோலியும், மகளிர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தனது அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்த விராட் கோலி இந்திய ஆடவர் அணி சார்பில் பரிந்துரைக்கப்பட்டார், ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது கோலிக்கு முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவிற்காக இந்த உலகக்கோப்பையில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரும் இந்த ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மகளிர் அணிசார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆசியக்கோப்பையை வெல்ல பெறும் பங்காற்றினார். இதனால் இவர்கள் இருவரும் மகளிர் சார்பில் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணியின் நிடா தார், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற சிறப்பான பங்காற்றியதால் அவரும் ஐசிசி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…