கோப்பையை வெல்ல விராட் கோலி ஆர்சிபியை விட்டு வெளியேற வேண்டும் – கெவின் பீட்டர்சன் !!

Published by
அகில் R

சென்னை : விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

கடந்த மே-22ம் தேதி அன்று ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் 17 முறை ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முயற்சி செய்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தும் வெளியேறியுள்ளது. மேலும், 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியடைந்துள்ளது.

அதிலும் பெங்களூரு அணியில் விராட் கோலி தனது அணிக்காக ஒவ்வொரூ முறையும், ஒவ்வொரு போட்டியிலும் முழு ஈடுபாடுடன் விளையாடுவார். ஆனாலும், அந்த அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்கும் ராசி இல்லாமலே இருந்து வருகிறது. தற்போது இதை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான் கெவின் பீட்டர்சன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியின் போது பேசி இருந்தார்.

அவர் இதனை பற்றி கூறுகையில், “நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன் மற்ற விளையாட்டுகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் பெருமை தேடுவதற்காக அணிகளை விட்டு வெளியேறுவார்கள். இங்கு விராட் கோலி கடினமாக முயற்சி செய்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார், அவர் இவ்வாறு செய்தும் ஆர்சிபி அணி மீண்டும் தோல்வியுற்றது. அவர் அணியில் இருந்து வெளியேறி வேறு அணியில் சென்று விளையாடலாம்.

உண்மையில் அது டெல்லி அணியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் செல்ல வேண்டிய இடம் டெல்லி தான். அவருக்கு டெல்லியில் ஒரு வீடு உள்ளது என்பது எனக்குத் தெரியும். அங்கு அவருக்கு ஒரு இளம் குடும்பம் உள்ளது. அவர் டெல்லியில் அதிக நேரம் செலவிடுகிறார், அவர் டெல்லியில் பிறந்தவர் ..அவர் ஏன் டெல்லிக்கு செல்ல முடியாது?

விராட் நீண்ட நேரம் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். கால்பந்தில் நீங்கள் பாருங்கள் பெக்காம் அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்றார், ரொனால்டோ வெளியேறி வேறு அணிக்கு சென்றார், மெஸ்ஸி வெளியேறி வேறு அணிக்கு சென்றார் அதே போல டெல்லி அணிக்கு கோலி செல்ல வேண்டும்”, என்று பீட்டர்சன் நேற்றைய ஐபிஎல் போட்டியின் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

4 minutes ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

1 hour ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

1 hour ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

2 hours ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

3 hours ago