விராட் கோலி அதிரடி சதம்..! குஜராத் அணிக்கு 198 ரன்கள் இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 197/5 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்  மோதுகின்றன.

பெங்களூரில் மழைபெய்ததால் டாஸ் போடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு அணியில் விராட் கோலி, டு பிளெசிஸ் முதலில் களமிறங்கினர். இதில் டு பிளெசிஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி அதிரடியாக விளையாடினாலும், மேக்ஸ்வெல்(11 ரன்கள்) மற்றும் மஹிபால் லோமரோர்(1 ரன்) அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின், சிறப்பாக விளையாடிய கோலி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் அடிக்க, மைக்கேல் பிரேஸ்வெல் கோலியுடன் இணைந்து ரன்கள் எடுத்த நிலையில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின், விராட் கோலி இறுதிவரை நின்று அதிரடி காட்டி சதமடித்து அசத்தினார். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், டு பிளெசிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23* ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணி சார்பாக நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 mins ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

41 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

46 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago